Published: MAR 29, 2024
கல்வி, மருத்துவம் என இரண்டையும் தனது கண்களாக நினைப்பவர் டாக்டர் பாரிவேந்தர். காரணம், பல கல்வி நிறுவனங்களை தொடங்கி வெற்றி கண்டது மட்டுமல்லாமல், அதன் பயனாக பல மாணவர்களை வாழ்க்கையில் ஏற்றம் பெறச் செய்தவர். கல்வியால் பல குடும்பங்கள் உயர்வுபெறக் காரணமாக இருந்தவர். பல மருத்துவமனைகளை நிறுவி லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற உறுதுணையாக இருந்தவர். அரசு செய்ய வேண்டிய சேவைகளைத் தனிநபராக செய்து வருபவர். கடந்த 5 ஆண்டுகளாக பெரம்பலூர் தொகுதி எம்.பி-யாக இருந்து மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றியுள்ளார். 'ஓடி ஓடி உழைக்கனும், ஊருக்கெல்லாம் கொடுக்கனும்' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தன் வாழ்க்கையை வாழ்பவர். தான் சம்பாதித்த பணத்தை தொகுதி மக்களுக்காக வாரி வழங்கி வருபவர்.
மேலும், பெரம்பலூர் மக்களின் நீண்ட காலக் கனவுத் திட்டமான அரியலூர் - பெரம்பலூர் - துறையூர் - நாமக்கல் ரயில் திட்டத்திற்கு அனுமதி பெற்று, செயற்கைக்கோள் ஆய்வைத் தொடங்கி வைத்தவர் டாக்டர் பாரிவேந்தர்.
உடும்பியம், அன்னமங்கலம், திருவாலந்துறை, நூத்தப்பூர், பெரிய வடகரை, சாத்தனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு ரூபாய் 1 கோடி மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி, மக்களின் ஆரோக்கியம் காத்த அற்புதமான மனிதர் நமது டாக்டர் பாரிவேந்தர். அதுமட்டுமல்லாமல், சிறுகனூரிலும், இருங்களூரிலும் புதிய மேம்பாலம் கட்டிக் கொடுத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அளவில் சிறந்த எம்.பி என்ற நற்பெயரையும் ஈட்டியுள்ளார்.
நாளைய இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையோடும், மாணவச் செல்வங்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும், தொடக்கக் கல்வி முதல் பலதரப்பட்ட மேற்கல்வி வரை 1,200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி வழங்கி தனிநபராக சாதனை புரிந்தவர். அழியாத கல்விச் செல்வத்தை வழங்கி, பல மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றி, பல குடும்பங்களின் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றி வருகிறார். கொரோனா கால கட்டத்தில் ஏழை மக்கள் சிகிச்சை பெற தான் நடத்தும் மருத்துவமனைகள் மூலம் உதவியவர்.
இந்த முறையும் தான் மீண்டும் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொகுதி முழுக்க 1,200 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வி அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். எந்தக் குடும்பத்திலும், தாய், தந்தையர்தான் தங்கள் குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும், வாழ்வில் உச்சம் பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் எம்.பி-யாக இருக்கும் டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூரில் உள்ள மக்கள் அனைவரையும் தனது குடும்பமாகப் பார்க்கிறார். அதனால்தான் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தன்னால் முடிந்த உயர்கல்வி உதவியை வழங்கி வருகிறார். இந்த முறை தான் எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டதும் 1,200 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வியை வழங்குவதாகவும், பெரம்பலூர் மக்களுக்கு கல்வித் தந்தையாக தனது கடமை சிறப்பாக செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இதனால் உற்சாகம் அடைந்திருக்கும் பெரம்பலூர் தொகுதி மாணவர்கள், 'பாரிவேந்தர் வர்றாரு, படிக்க வைக்க போறாரு' என பாடல் பாடி அவரை வரவேற்று மகிழ்கின்றனர்.